அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டிவிலியர்ஸ் அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

'மிஸ்டர் 360', 'உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன்' என்று அழைக்கப்படும் டிவிலியர்ஸ், நடப்பு ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

 

இந்த நிலையில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் டிவிலியர்ஸ் இன்று அறிவித்துள்ளார்.

 

அடுத்த உலகக்கோப்பை வரை விளையாடுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், டிவிலியர்ஸின் இந்த திடீர் ஓய்வு முடிவு அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS