Looks like you've blocked notifications!

சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியை, மளிகை கடைக்காரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சம்பவ தினத்தன்று, நெசப்பாக்கம் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும் முகமது அலி கடைக்கு சாக்லேட் வாங்க, அந்த பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி சென்றுள்ளார்.

 

நீண்ட நாட்களாக அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த முகமது அலி, அன்று அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

 

வீட்டிற்கு வந்த சிறுமி, தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதையடுத்து, அச்சிறுமியை அழைத்து சென்று மருத்துவர்களிடம் பரிசோதித்தபோது அவருடைய பிறப்புறுப்பில் ரத்த காயம் இருப்பது தெரியவந்துள்ளது.

 

இதனையடுத்து, இந்த கொடும் செயலை அரங்கேற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, முகமது அலியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BY SATHEESH | MAR 30, 2018 12:18 PM #SEXUALABUSE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS