Looks like you've blocked notifications!

தஞ்சையில் பிளஸ்-1 படிக்கும் பெண்ணை, ஆறு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சை பர்மா காலணியைச் சேர்ந்த இளைஞர் மணிமாறன் (18),  அதே பகுதியைச் சேர்ந்த தனது 16 வயது காதலியுடன் புது ஆற்றுப் பாலத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

 

அப்போது, அந்த வழியாக வந்த கார்த்தி (20) மற்றும் அவரது அண்ணன் இளவரசன் (22), மணிமாறனை அடித்து விரட்டி உள்ளனர்.

 

தொடர்ந்து, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவரும், தங்களது நண்பர்களான இளவரசன் (26), ரவிச்சந்திரன் என்ற சோனி (36), செல்வம் (19), நடராஜன் (20) ஆகியோரை போன் செய்து அழைத்ததாக கூறப்படுகிறது.

 

அந்த ஆறு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொண்டிருந்த சமயத்தில், விரட்டி விடப்பட்ட அந்த பெண்ணின் காதலர் மணிமாறன் தனது உறவினர்களோடு வந்து அந்த பெண்ணை மீட்டுள்ளார்.

 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த ஆறு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

BY SATHEESH | APR 2, 2018 12:35 PM #RAPE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS