Video Credit: ANI

 

சென்னை அயனாவரத்தை சேர்ந்த காது கேளாத 11 வயது சிறுமியை, சுமார் 17 பேர் 7 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் குடியிருப்பை சேர்ந்த 17 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 17 பேரையும் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட  17 பேரையும் வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பைத் தொடர்ந்து `17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

முன்னதாக தீர்ப்பைத்தொடர்ந்து முதல்மாடியிலுள்ள நீதிமன்ற அறையிலிருந்து குற்றவாளிகளை போலீசார் வெளியில் அழைத்துவந்தனர். அப்போது மாடிப்படிகளில் ஏறிய 10-க்கும் மேற்பட்டவர்கள், குற்றவாளிகள் 17 பேர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை  அவர்களிடமிருந்து காவல்துறையினர் மீட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள் என்று கூறப்படுகிறது. 

 

BY MANJULA | JUL 17, 2018 5:51 PM #SEXUALABUSE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS