சென்னை அருகே உள்ள கொட்டிவாக்கம் கடற்கரையில் சனிக்கிழமை காலை 45 வயது பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது. பின்பு அவர் பாலவாக்கத்தைச் சேர்ந்த சிவகாமி என்பது அடையாளம் காணப்பட்டது.

 

சிவகாமி கடந்த இரண்டு மாதங்களாக மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்ததாக அவரது கணவர் முருகன் போலிசாரிடம் தெரிவித்தார்.
சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பிய அவர் காலை 8 மணி அளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதேபோன்று, 17 வயது பெண் ஒருவரின் சடலம் கிரீன்வேஸ் ரோடு அருகே அடையாறு ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.


விசாரணையில் அவர் கோட்டுர்புரத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகள் ரம்யா என்பது தெரியவந்தது. அண்ணாதுரைக்கும் அவரது மனைவிக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குவாதத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியே சென்ற ரம்யா சனிக்கிழமை காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 22, 2018 2:31 PM #KOTTIVAKKAMBEACH #WOMANSBODYFOUND #TAMIL NADU NEWS

OTHER NEWS SHOTS