பெற்ற மகனை தாயே ஒளித்து வைத்து விட்டு, கணவனிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலம் கோல்காபூர் பகுதியை சேர்ந்த கிரிஷ்-சுப்ரியா தம்பதியருக்கு சௌர்யா என்னும் மகன் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியர் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

 

இந்தநிலையில் தனது மகன் சௌர்யாவை ஒளித்து வைத்து விட்டு கிரிஷிடம் ரூ. 2 கோடி கேட்டு சுப்ரியா மிரட்டியிருக்கிறார். இதற்கு சுப்ரியாவின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதற்கிடையில் நீதிமன்றம் சென்ற கிரிஷ் நடந்தவற்றை விவரித்து இதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு தொடருமாறு முறையிட்டுள்ளார்.

 

நீதிமன்றத்தின்  அறிவுறுத்தலின்படி சுப்ரியா, அவரது பெற்றோர், சகோதரர் மற்றும் சகோதரர் மனைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

BY MANJULA | JUL 27, 2018 4:37 PM #MUMBAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS