'அடேங்கப்பா'...8.40 கோடிக்கு ஏலம் போன,தமிழக வீரர்:முட்டி மோதிய சென்னை அணி...ஜெயிச்சது யாரு?

Home > தமிழ் news
By |

ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படுகிறது.அடுத்த ஆண்டு ஐபிஎல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடக்கிறது. இதில் மொத்தமாக 351 வீரர்கள் ஜெய்ப்பூரில் நடக்கும் ஏலத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில்  ரூ. 20 லட்சம் அடிப்படை தொகைக்கு ஏலத்தில் இருந்த தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தியை கிங்ஸ் லெவன் அணி ரூ. 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது.சென்னை அணி வருணை ஏலத்தில் எடுக்க முயன்றும் அது முடியாமல் போனது.

 

தற்போது நடைபெற்று வரும் உள்ளுர் போட்டிகளில் வருண் அசத்தலாக விளையாடி வருகிறார்.இதனால் அவரை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியது.இறுதியில் கிங்ஸ் லெவன் அணி அவரை தட்டி சென்றது.

IPL, IPL AUCTION 2019, VARUN CHAKRAVARTHY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS