ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷன்கர் என்ற பகுதியில் ஒரு சுங்க சாவடி அமைந்துள்ளது.அங்கு சுங்க வரி கட்டுவதற்காக ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்று கொண்டிருந்தன.அப்போது அங்கு பீர் ஏற்றிக் கொண்டு வந்த லாரியானது கட்டுப்பாடை இழந்து சுங்க சாவடி மீது வேகமாக மோதிய காட்சிகள் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.

 

ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் சுங்க வரி கட்டுவதற்காக ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தன.அப்போது பீர் பாட்டில்களை ஏற்றி கொண்டு வந்த லாரியானது வேகமாக சுங்கச் சாவடி மீது மோதியது.மோதிய வேகத்தில் சுங்க வரி கட்டுவதற்காக நின்று கொண்டிருந்த ஜீப்மீதும் மோதி நின்றது.

 

இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார்.அதிர்ஷ்டவசமாக வேறு யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.இந்த விபத்து காட்சியானது சுங்க சாவடியில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

BY JENO | SEP 22, 2018 11:09 AM #ACCIDENT #CCTV #RAJASTHAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS