‘மனைவி கொல்லப் பார்க்கிறாள்’.. கலெக்டர் ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!

Home > தமிழ் news
By |

நண்பருடன் சேர்ந்து மனைவி தன்னை கொல்லப் பார்ப்பதாக கொடுத்த புகாரை யாரும் பரிசீலிக்காத நிலையில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயற்சித்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

விசாரித்ததில், நெல்லை மாவட்டம், தாதனூத்து கிராமத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வரும் 38 வயதான அந்நபர், சங்கர் நகர் பேரூராட்சியின் கட்டணக் கழிவறையில் வேலைபார்ப்பவர். 

 

இவருக்கும் இவரின் மனைவிக்குமிடையே அண்மை காலமாக தகராறு இருந்து வருவதாகவும், மேலும் இவரது மனைவி செல்வம் என்கிற தனது நண்பருடனான தொடர்பு காரணமாக, தனது மனைவி மற்றும் செல்வம் இருவருமே இணைந்து கூட்டாக தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

ஆனால் காவல் துறையினர் இதுபற்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இவ்வாறு கலெக்டர் ஆபீசுக்கு எண்ணெயுடன் வந்து தீக்குளிக்க முயற்சித்ததாகக் கூறியுள்ளார். பின்பு காவல் துறையினர் அவரை அப்புறப்படுத்தி, விசாரணை நடத்தி வருகின்றனர். 

TIRUNELVELI, TAMILNADU, SELF-IMMOLATE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS