பச்சிளம் குழந்தையை பைக்குள் எடுத்துச் சென்று வீசிய கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய பெண்மணி!

Home > தமிழ் news
By |

போரூரில் பச்சிளம் குழந்தையை பைக்குள் எடுத்துச் சென்று பொது இடத்தில் விட்டுவிட்டு சென்றுள்ள சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. சென்னை, போரூரில் உள்ள காரம்பாக்கம் கல்லறை அருகே இருக்கும் கால்வாய் பக்கம் குழந்தை ஒன்றின் அழுகை சத்தம் கேட்க, அங்கிருக்கும் செக்யூரிட்டி ரவி என்பவர் அந்த குழந்தையை தேடிக் கண்டுபிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.

 

அதன் பின்னர் வழக்குப் பதிவு செய்து புலனாய்வு செய்த போலீசார், அந்த இடத்தில் இருந்த சிசிடிவியை சோதனை செய்தபோது, வயதான பெண்மணியும் இன்னொரு ஆடவரும் நடந்து செல்கின்றனர். அவர்களில் அந்த பெண்மணி, ஒரு பையில் குழந்தையை எடுத்து வந்து கல்லறைக் கால்வாய் அருகே வைத்துவிட்டு சென்ற நெஞ்சத்தை பதைக்க வைக்கும் வீடியோ கிடைத்தது. பின்னர் குழந்தையை சின்ன போரூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி செய்தனர். 

 

எனினும் அவர்கள் குழந்தையின் பெற்றோர்களா அல்லது குழந்தையை கடத்தியவர்களா என்பன போன்ற பல கோணங்களில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

PORUR, BABY, THROWNBABY, TAMILNADU, CRIME, POLICE, INVESTIGATION, CCTV

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS