சென்னையில் தற்போது இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன்,மழை பெய்துவருவதால் பொதுமக்கள் பலரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

சில இடங்களில் பெரும் மரங்கள் சூறைக்காற்றில் தாண்டவமாடுவதால் அவை ரோட்டில் எதுவும் விழுந்து விடுமோ என்றும், புயல் வருமோ எனவும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். 

 

கொளுத்தும் வெயிலுக்கு இந்த மழை சில்லென இதமாக இருந்தபோதும், மழைக்கும்-சென்னைக்கும் உள்ள ராசி தெரியும் என்பதால் சற்றும் பயமாவும் இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

எது எப்படியோ அடிக்கிற வெயிலுக்கு இந்த மழை நன்றாக உள்ளது என்பதே தற்போதைய நிதர்சனம்..

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS