கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த தனி ஒருவன் படத்தின் 2-வது பாகத்தை, எடுப்பதாக இயக்குநர் மோகன் ராஜா அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், '' ஹாய் பிரெண்ட்ஸ் இன்னைக்கு 28 ஆகஸ்ட் 2018. எல்லாருக்கும் தெரியும். தனி ஒருவன் படத்தின் 3-வது வருடம் இது. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாள் ஆக,ஆக வருஷம் ஆக,ஆக உங்க அன்பால நீங்க அந்த படத்தை பெருசா ஆக்கிட்டே போறீங்க.

 

வாழ்க்கைல மிகப்பெரிய வாழ்த்தா அந்தப்படம் எனக்கு அமைஞ்சிருக்கு. இந்த நல்ல நேரத்துல அந்தப்படத்துல சம்பந்தப்பட்ட எல்லாருக்குமே நான் நன்றி சொல்லிக்கிட்டு. ஒரு நல்ல விஷயமும் சொல்ல நினைக்கிறேன்.

 

அடுத்து நாங்க செய்யப்போற படம் தனி ஒருவன் 2. கண்டிப்பா ஒரு நல்ல படமா தர்றதுக்கு எல்லா முயற்சியும் பண்ணுவோம். இன்னும் அதிகமா கஷ்டப்படுவோம். உங்க எல்லாரோட ஆசிர்வாதமும் வேணும். எங்களை வாழ்த்துங்க,'' என தனது சகோதரர் ஜெயம் ரவியுடன் இணைந்து தெரிவித்துள்ளார்.

 

BY MANJULA | AUG 28, 2018 2:23 AM #THANIORUVAN2 #JAYAMRAVI #MOHANRAJA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS