'பார்த்து செய்யுங்கள் என விஜய் கூறவில்லை'.. அந்த பெருந்தன்மை எனக்குப் பிடித்தது!

Home > தமிழ் news
By |

பார்த்து செய்யுங்கள் என விஜய் கூறவில்லை, அந்த பெருந்தன்மை எனக்குப் பிடித்திருந்தது என இயக்குநரும், தென்னிந்திய எழுத்தாளர்கள்  சங்கத்தலைவருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

 

சர்கார் கதை தொடர்பான பிரச்சினை சுமூகமாக முடிந்ததைத் தொடர்ந்து பாக்யராஜ் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,'' நான்  இந்த பிரச்சினை தொடர்பாக விஜய்யிடம் போன் செய்து பேசினேன்.

 

அப்போது எனது படம் பார்த்து செய்யுங்கள் என அவர் கூறவில்லை.மாறாக எது நியாயமோ அதன்படி செய்யுங்கள் என விஜய் கூறினார். அந்த பெருந்தன்மை எனக்குப் பிடித்திருந்தது,'' என தெரிவித்தார்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS