‘என்னா அடி’.. அதிக சதம் அடித்து 7வது இடத்துக்கு முன்னேறிய ’தெறி’ வீரர்!

Home > தமிழ் news
By |

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான,  கடைசி டெஸ்ட் போட்டிகள் சிட்னியில் துவங்கின.  முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய, தொடரில் 2-1  என்கிற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. தொடரை வெல்ல இந்தியாவும், சமன் செய்யும் நோக்கில் ஆஸ்திரேலியாவும் விளையாடி வருகின்றன. தொடக்க ஆட்டக்காரரான மயன்க் அகர்வால், லயனின் பந்துவீச்சில் 2 சிக்ஸர்கள் அடித்து 77 ரன்கள் எடுத்தபோது அவுட் ஆகினார்.


பின்னர் வந்த புஜாராவும், கோலியும்  ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இதில் புஜாரா அடித்த சதம்  அணியின் வெற்றிவாய்ப்பை உயர்த்தியதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தேநீர் இடைவேளைக்கு பிறகு 90 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் குவித்திருந்த இந்திய அணியில் புஜாரா 130 ரன்களுடனும், விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


இந்தத் தொடரில் இது புஜாராவின் 3-வது சதம் என்பதோடு டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 18வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், டெஸ்ட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலின் 7வது இடத்துக்கு புஜாரா முன்னேற்றம் அடைந்துள்ளார்.

PUJARA, CRICKET, SYDNEYTEST, AUSVIND, BCCI, VIRATKOHLI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS