சென்னை கொளப்பாக்கம் பகுதியிலுள்ள ஒமேகா பள்ளியில் மழலையர் வகுப்புக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி வேனின் அட்டெண்டர்கள் இருவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து பள்ளியின் முன் திரண்ட பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பள்ளி வாகனத்தில் அட்டெண்டராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் வாகனத்தில் செல்லும் சிறுமிகளை தகாத முறையில் தொட்டு சில்மிஷம் செய்ததாக தெரியவந்ததையடுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் இதனால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய பெற்றோர் இதனை கண்டுகொள்ளாமல் இருந்த பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 26, 2018 2:17 PM #SCHOOLKIDSSEXUALABUSE #OMEGASCHOOL #CHENNAISCHOOL #PARENTSPROTEST #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS