'நீங்க ரெஸ்ட் எடுத்தா மட்டும் போதும்'...பிரபல இந்திய வீரர்களை ஓய்வெடுக்க சொன்ன பிசிசிஐ!

Home > தமிழ் news
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருக்கும்  அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரை  ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடமல் ஓய்வெடுக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

 

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியவில்  சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 இன்று பிர்ஸ்பேனில் நடைப்பெற உள்ளது.இதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.

 

இந்நிலையில்,தற்போது இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த போட்டிகளில் அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.ஆஸ்திரேலியவிற்கு எதிரான  டெஸ்ட் தொடரில் இவர்கள் இருவரும் இடம் பெற்றிருப்பதால்,தற்போது ரஞ்சி கோப்பையானது அவர்களுக்கு அதிகமான சுமையாக அமையும் என கருதிய பிசிசிஐ,இருவரையும் ஓய்வெடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

RAVICHANDRAN ASHWIN, BCCI, CRICKET, ISHANT SHARMA, REST, RANJI TROPHY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS