''மருத்துவரின் கண் முன்னே''...பியூன் செய்த செயல்:வைரலாகும் வீடியோ!

Home > தமிழ் news
By |

விபத்தில் காயம் அடைந்தவருக்கு மருத்துவரின் கண் முன்னே,பியூன் ஒருவர் தையல் போட்ட அதிர்ச்சி சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது.

 

ஹரியானாவில் உள்ள ரோத்தக் அரசு மருத்துவமனைக்கு விபத்தில் காயம் அடைந்த நபர் ஒருவர் கொண்டு வரப்பட்டார்.உடனே அவருக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர் வேடிக்கை பார்த்துள்ளார்.உடனே அங்கிருந்த பியூன் விபத்தில் காயம் அடைந்த நபருக்கு தையல் போட்டுள்ளார்.இந்த காட்சிகளை காயம் அடைந்த நபரின் உறவினர் வீடியோவாக எடுத்து தற்போது வெளியிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக விபத்தில் காயம் அடைந்த நபர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் " விபத்தில் அடிபட்ட நான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டேன்.அங்கு வந்த மருத்துவர் எனக்கு சிகிக்சை அளிக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.அங்கிருந்த பியூன் எனக்கு தையல் போட்டார்.ஆனால் எனக்கு எந்த விதமான  வலி நிவாரணியும் கொடுக்கப்படவில்லை.இதனால் நான் வலியால் துடித்து கொண்டிருந்தேன்"என்று அவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

 

இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

PEON PUT STITCHES, DOCTOR, ROHTAK CIVIL HOSPITAL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS