திமுக தலைவர் கருணாநிதி கூடுதல் சிகிச்சைக்காக,ஆம்புலன்ஸில் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இதனைத்தொடர்ந்து காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் குவியத்தொடங்கினர். இதனால் காவேரி மருத்துவமனையை சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தநிலையில், ''திடீரென ஏற்பட்ட இரத்த அழுத்த குறைவு காரணமாக திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி இன்று காலை 1.30 மணியளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்; அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்,'' என காவேரி மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 


 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS