மகளை பெண் கேட்டு, தனது கள்ளக்காதலர் தொல்லை..தாய் தற்கொலை!

Home > தமிழ் news
By |

வேலூரில் மேல் புதுப்பேட்டையைச் சேர்ந்த  கல்பனா என்பவர், தன் மகளை தன்  காதலரே அடைய விரும்பியதால், தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூரின் வாலஜாவை அடுத்த மேல் புதுப்பேட்டையில் உள்ளது பஜனைத் தெரு.  36 வயது கல்பனா, தனது கணவர் ரமேஷ்குமாரை பிரிந்து , தனது இரு பருவ வயது மகள்களுடன் வசித்து வந்தார்.  இந்நிலையில் சென்னை ஆவடியை அடுத்த காவேரிப்பாக்கத்தில் பணிபுரியும் குமரேசன் என்கிற காவலர் கல்பனாவின் காதலராக அடிக்கடி கல்பனாவின் வீட்டுக்குச் சென்று வந்துகொண்டிருந்தார்.  ஒரு கட்டத்தில் கல்பனாவின் மூத்த மகளைன் தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டு தகராறு செய்ததை அடுத்து, இந்த எண்ணத்தோடு வீட்டுக்கு வர வேண்டாம் என கல்பனா குமரேசனை எச்சரித்துள்ளார்.


அதன் பிறகும் குமரேசன் கொடுத்த துன்புறுத்தல்களை தாளாத கல்பனா தன் வீட்டில் தூக்கிலிட்டுக்கொண்டார். இதுகுறித்து கல்பனாவின், மூத்த மகள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவலர் குமரேசன், தன்னை அடைய நினைத்ததற்கு  தனது தாய் கல்பனா குறுக்கே நின்றதால், கல்பனாவை குமரேசன் கொன்று தூக்கிலிட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் கூறியுள்ளார்.

SEXUALABUSE, TAMILNADU, SUICIDE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS