'T20 கிரிக்கெட்டிற்கு குட்பை சொல்ல போகும் பிரபலம்'...அதிர்ச்சியில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்!

Home > தமிழ் news
By |

சமீபகாலமாக இந்திய கிரிக்கெட்டில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் “மிதாலி ராஜ்”.ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நிகராக இந்திய பெண்கள் அணியினை தூக்கி நிறுத்தியவர்.ஆனால் அவர் சந்தித்த அவமானங்களுக்கும்,சர்ச்சைகளுக்கும் அளவே கிடையாது.

கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில்,இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று பரிதாபமாக வெளியேறியது. இந்த முக்கியமான போட்டியில் சாதனை வீரர் மிதாலி ராஜ் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டார்.அவர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் எனகிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்கள்.

பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான மிதாலி,இங்கிலாந்திற்கு எதிரான இருபது ஓவர் போட்டி தொடருடன்,20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டி20 போட்டியில், அதிக ரன் குவித்த இந்தியர்கள் பட்டியலில்,இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதனிடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில்,மிதாலி ராஜ் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவரின் ஓய்வு கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயம் பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

CRICKET, BCCI, MITHALI RAJ, T20, RETIRE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS