மைக்ரோ ஓவனில் 20 மாத குழந்தையின் சடலம்: பாட்டி கைது!

Home > தமிழ் news
By |

அமெரிக்காவின் மிஸிஸிப்பிக்கு அப்பால் உல்ள பொலிவாரில் பிறந்து 2 வருடங்கள், அதாவது 20 மாதங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று வீட்டு கிச்சனில் உள்ள மைக்ரோ ஓவனில் சடலமாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

 

அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தை குழந்தையின் பாட்டியும் 48 வயதானவருமான கரோலின் ஜோன்ஸ்’தான் கொன்றிருக்கிறார் என்ற அடிப்படையில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளார். பாட்டியிடமே கொஞ்ச நாட்கள் குழந்தை வளர்ந்ததாகவும், குழந்தையின் தாய் வெளியூரில் இருந்ததாகவும் கூறும் கரோலின் ஜோன்ஸின் சகோதரர்தான் மைக்ரோ ஓவனில் குழந்தை இறந்துள்ளதை அறிந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். 

 

இதுகுறித்து போலீசார், குழந்தை இறந்த பின் மைக்ரோ ஓவனில் வைக்கப்பட்டுள்ளதா என்றெல்லாம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தி தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, பாட்டி கரோலின் ஜோன்ஸினை கைது செய்துள்ளனர்.

 

மேலும் குழந்தையின் தாய், ‘எனது மகள் பிறந்ததுதான் என் வாழ்க்கையில் நடந்தவற்றிலேயே அரிதான நல்ல விஷயங்களுள் முக்கியமானவள். அவளை எனது தாயாருக்கும் பிடிக்கும். ஆனால் இவ்வாறு செய்திருக்கிறார்’ என்று குழந்தையினை எண்ணி கதறி அழுதுள்ளார். பச்சிளம் குழந்தை மைக்ரோ ஓவனில் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியாக இருந்ததாகவும் அப்பகுதி ஷெரிப் என்று சொல்லக்கூடிய காவல் ஆணையர் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். 

BABYMURDERED, BABYINOVEN, GRANDMOTHERKILLSBABY, CRIME, BOLIVAR, MISSISSIPPI, 2YEAROLDBABY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS