"நான் உயிர் பிழைத்து வந்திருக்கிறேன்"...விபத்துக்குப் பின் மாத்யூ ஹெய்டனின் உருக்கமான பதிவு!

Home > தமிழ் news
By |

ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான மாத்யூ ஹெய்டன் விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

 

குயின்ஸ்லாந்தில், குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடிக் கொண்டிருந்த மாத்யூ ஹெய்டன் அலைச்சறுக்கு விளையாட்டின் போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.இதில் கழுத்து, முதுக்குத் தண்டு என பல இடங்களில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

 

இதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹெய்டனிற்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.அதன் பிறகு மருத்துவமனையில் கழுத்தில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹெய்டன் பதிவிட்டுள்ளார்.

 

அதில் "நான் பெரும் ஆபத்திலிருந்து தப்பித்து உயிர் பிழைத்து வந்திருக்கிறேன்,இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவியாக இருந்த நண்பர்கள்,ரசிகர்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். முக்கியமாக, பென் மற்றும் சூ கெல்லி. உடனடியாக எம்.ஆர்.ஐ. சிடி ஸ்கான் எடுத்து கண்டுபிடித்தீர்கள். கழுத்தில் ஒரு எலும்பு உடைந்துவிட்டது. மற்ற இரண்டு இடங்களில் தசைநார் கிழிந்துவிட்டது. ஒரு பெரும் ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறேன். அனைவருக்கும் நன்றி. இதிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

CRICKET, MATTHEW HAYDEN, DODGED A BULLET

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS