பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான மஹத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா,யாஷிகா-மஹத் காதல் மற்றும் தனது சொந்த வாழ்க்கை குறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்துள்ள நிலையில் நேற்று யாஷிகா மீது காதல் உள்ளது என மஹத் ஒப்புக்கொண்டார். ஏற்கனவே அவருக்காக வெளியே அவரது காதலி காத்துக்கொண்டிருக்கும் நிலையில், மஹத் இப்படி ஒப்புக்கொண்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

இந்தநிலையில் அவரது காதலி பிராச்சி இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், ''இந்த வீடியோ மஹத் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும்போது எடுத்தது.எனது காதலனை நான் உள்ளே அனுப்பி வைத்தேன்.பிக்பாஸ் நேரத்திற்கு ஏற்ப எங்களது வாழ்க்கையை நாங்கள் திட்டமிட்டோம். எல்லோரும் அவன் குறித்து சமூக வலைதளங்களில் என்னிடம் கேட்கிறார்கள்,அல்லது திட்டுகிறார்கள். அதனால் எனது சொந்த வாழ்க்கை குறித்து நான் அனைவருக்கும் பதில் அளிக்கிறேன்.

 

நான் இனிமேல் மஹத்துடன் இருக்க மாட்டேன். ஆனால் அவன் வெளியில் வந்தபிறகு, நான் இந்த விஷயங்கள் குறித்து அவனிடம் விவாதிப்பேன். அவர் யாஷிகா மேல் அன்பு வைத்துள்ளது தற்போது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.எனக்கு கஷ்டமாக உள்ளது.ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையை இது பாதிக்காது,என்னை நான் பார்த்துக் கொள்வேன்.மும்தாஜிடம் அவன் மோசமாக நடந்து கொள்கிறான்.

 

அவனது நலம் விரும்பியாக பிக்பாஸ் வீட்டில் ஜனனி உள்ளார்.ஆனால் அவளுக்கும் அவன் ஆதரவாக இல்லை.தாழ்மையுடன் உங்கள் அனைவரையும் கேட்டுகொள்கிறேன். அவனைப்பற்றி என்னிடம் கேட்காதீர்கள், நீங்கள் அனைவரும் என்மீது காட்டிய அக்கறைக்கு நன்றி. இது என்னுடைய சொந்த வாழ்க்கை நான் பார்த்துக் கொள்கிறேன்,''என தெரிவித்துள்ளார்.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS