தமிழகம்:உயர்நீதிமன்றங்களுக்கு நாளை முதல் 21-ம் தேதி வரை விடுமுறை!

Home > தமிழ் news
By |

வரும் தசரா, நவராத்திரி பண்டிகைகளையொட்டி உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் அக்டோபர் 13 முதல் 21 வரை பதிவாளர் குமரப்பன் விடுமுறை அறிவித்துள்ளார்.

 

மேலும் விடுமுறை கால அவசர வழக்குகளை விசாரிப்பதற்காகவே, அக்டோபர் 16-ல் தனியாக ஒரு நாள் ஒதுக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும் இதற்கிடையே வரும் அவசர வழக்குகளுக்கான மனுவை அக்டோபர் 15-ல் பகல் 1.30 மணி வரை தாக்கல் செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.  இந்த அவசர வழக்குகளை சென்னையில் 4 நீதிபதிகள், மதுரையில் 3 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

MADRASHIGHCOURT, MADURAIBRANCHHIGHCOURT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS