பாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளி ஆசிரியர்.. போராடிய பெற்றோருக்கு தடியடி!

Home > தமிழ் news
By |

மேற்கு வங்கம் கொல்கத்தாவில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் நடந்த போராட்டத்தில் பொதுமக்கள் தடியடி வாங்கும் வீடியோ இணையத்தில் பரவி பலரையும் அதிர வைத்துள்ளது.  கொல்கத்தாவில் பள்ளி வயது மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறியும், சம்மந்தபட்ட  ஆசிரியரின் மீது கடுமையன நடவடிக்கை எடுக்கக் கோரியும்  தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள அந்த பள்ளியின்முன் மாணவியின் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.


இதனையடுத்து பெற்றோருடன் சேர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் உள்ளிட்ட பலரின் மீதும், கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் தடியடி நடத்திய வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரையும், போராட்டம் நடத்தும் பெற்றோரின் மீது தடியடி நடத்திய காவல் துறையையும் கண்டித்தபடி  தலைவர்களும், இணைய வாசிகளும் பதிவிட்டு வருகின்றனர்.

SEXUALABUSE, SCHOOLSTUDENT, KOLKATA, CHILDABUSE, SCHOOLTEACHER

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS