கலவரம்: பாஜகவின் ஒரு நாள் பந்த்-க்கு எதிராக திரிணாமூல்!

Home > தமிழ் news
By |

கொல்கத்தாவின் பாராசத் ரயில் நிலையத்தில் பாஜக ஆதரவாளர்களுக்கு திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு நடந்த கலவரம் பெரிதாக வெடித்துள்ளது.


மேற்கு வங்கத்தின் வடக்கு தினாஜ்பூரில் இரண்டு மாணவர்கள் இறந்துவிட்ட சம்பவத்தை அடுத்து, காவலர்களை கண்டிக்கும் பொருட்டு, அங்கு பாஜக நாடு பாராசத் ரயில் நிலையத்தில் ரயில் மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆனால் இந்த ரயில் மறிப்புக்கும், பாஜகவின் ஒடு நாள் பந்த்-க்கும் எதிரான  நிலைப்பாட்டுடன் இருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறிப்பைத் தடுக்கு முனைந்ததில், திரிணாமூல் காங்கிரசினருக்கும் பாஜகவுக்கும் தள்ளுமுள்ளு உண்டானது.

 

இதில் காவலர்களுக்கும் இருவேறு கட்சியினருக்கும் நடந்த தள்ளுமுள்ளு பொதுமக்களின் அமைதியை சீர்குலைத்ததை அடுத்து போலீசாரின் தீவிர கட்டுப்பாட்டால் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

BJP, TMC, WESTBENGAL, KOLKATA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS