கருணாஸ் வழக்கு : காவல்துறையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

Home > தமிழ் news
By |

கருணாஸை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையினரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாலும், சாதி சார்ந்த சர்ச்சைக் கருத்துக்களை பேசியதாலும் கடந்த 23-ம் தேதி நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கைது செய்யப்பட்டார்.


6-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு போடப்பட்டு சிறைக் காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில், கருணாஸை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையினரின் மனுவுக்கு எதிரான வாதத்தை கருணாஸ் தரப்பு முன்வைத்தது.  இதனையடுத்து, கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம், காவல்துறையினரின் மனுவை தள்ளுபடி செய்தது.

KARUNASARREST, TAMILNADUPOLICE, TAMILNADU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS