'இவர் ஐபிஎல்'லில் விளையாடினா'....25 கோடி கொடுத்து கூட ஏலம் எடுப்பாங்க!

Home > தமிழ் news
By |

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில்,கபில் தேவ் விளையாடினால் அவரை 25 கோடி ரூபாய் கொடுத்து கூட ஏலம் எடுப்பார்கள் என,இந்திய கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது.இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கிறது.இதற்கான ஏலம் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது.ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான வீரர்களின் ஆட்டத்தினை காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

 

இந்நிலையில் 1983-ம் ஆண்டு  உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்தவர்  கேப்டன் கபில் தேவ். அந்த அணியில் இடம்பெற்றிருந்த கவாஸ்கர்,தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலம் குறித்து தெரிவித்த கருத்து தற்போது படு சுவாரசியமாக விவாதிக்கப்பட்டு வருகிறது,

 

“ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் கபில் தேவ் தற்போது கலந்து கொண்டால்,அவர் 25 கோடிக்கு வாங்கப்படுவார்.ஜிம்பாப்வே அணிக்கு எதிராக,1983 உலகக் கோப்பை போட்டியில்,கபில் தேவ்  விளாசிய 175 ரன்களை என்றுமே மறக்க முடியாது. ஒரு கிரிக்கெட் வீரராகவும்,ரசிகனாகவும் அவரது சாதனையை வியந்து பார்க்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

IPL, CRICKET, BCCI, SUNIL GAVASKAR, KAPIL DEV

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS