'அசுர வேகத்தில் தெறித்த ஸ்டெம்ப்'.. 'பிஞ்ச்'சை பஞ்சாக பறக்கவிட்ட பாஸ்ட் பவுலர்!

Home > தமிழ் news
By |

ஆஸ்திரேலியவிற்கு எதிராக அடிலெய்டில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில்,இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா வீசிய பந்தில்,ஆஸ்திரேலிய வீரர் பின்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

 

இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கோப்பையை வென்றதில்லை.இதனால் இம்முறை கண்டிப்பாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் விளையாடி வருகிறது.இந்நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர்கள் யாரும் தங்களின் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.ஆனால் புஜாரா மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக (123) சதம் அடித்து வெளியேறினார்.

 

இதையடுத்து இரண்டாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில்,பின்ச் மற்றும் அறிமுக வீரர் மார்கஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக ஆட்டத்தை தொடங்கினர்.முதல் ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா வீசினார்.அவர் வீசிய மூன்றாவது பந்தை ஆஸ்திரேலிய வீரர் பின்ச் அடிக்க தவற,அது அசுர வேகத்தில் ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது.பந்து சென்ற வேகத்தில் இரண்டு ஸ்டெம்ப்கள் பறந்து சென்றது.இதனால் பரிதாபமாக தனது விக்கெட்டை பறிகொடுத்து,பின்ச் நடையை கட்டினார்.

CRICKET, ISHANT SHARMA, AARON FINCH, INDIA VS AUSTRALIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS