இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ் கொண்ட... பிரபல மாடல் அழகி கொடூரமாக சுட்டுக்கொலை!

Home > தமிழ் news
By |

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ் கொண்டவரும்,பிரபல மாடல் அழகியுமான  தாரா ஃபேர்ஸ் பட்ட பகலில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில், மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டார்.அவரது இறப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அவரது மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்கள்.

 

ஃபேர்ஸ் தனது ஆடம்பர காரான போர்ஷில் சென்றுக் கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை கொடூரமாக சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஈராக்கின் உள்துறை அமைச்சக அதிகாரி "இந்த கொலை சம்பவம் குறித்து அரசு விரிவான விசாரணையை மேற்கொள்ளும் எனவும்,இது போன்ற சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் கடுமையாக தெரிவித்தார்.

 

மாடல் துறையில் கொடிகட்டி பறந்த ஃபேர்ஸ் தனது வாழ்க்கையை மிகவும் சுதந்திரமாகவும்,தனித்துவமாகவும் வாழ்ந்து வந்ததால் அதனை பிடிக்காத நபர்களால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

ஃபேர்ஸை, இன்ஸ்டாகிராமில் 27 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஸ்டைலான படங்களுக்காக உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர்.அவரின் மரணத்தை அடுத்து, பலர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களையும் இரங்கலையும் பதிவு செய்து வருகின்றனர்.

INSTAGRAM, MURDER, TARA FARES, IRAQ

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS