'அவர்கள் பிசாசுகள்'.. அதனால் தான் சுட்டுக்கொன்றேன்!

Home > தமிழ் news
By |

டெல்லி மாவட்ட கூடுதல் நீதிபதி கிருஷ்ணகாந்த் சர்மாவின் மனைவி மற்றும் மகன் ஆகியோரை பட்டப்பகலில் அவரது பாதுகாவலர் மஹிபால் நடுரோட்டில் வைத்து, துப்பாக்கியால் நேற்று முன்தினம் கொலை செய்தார். இதில் அவரது மனைவி இறந்துவிட மகன் தற்போது ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

 

இதைத்தொடர்ந்து மஹிபாலை கைது செய்த போலீசார் அவரிடம் இந்த படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து மஹிபால் தனது வாக்குமூலத்தில் கூறியதாவது:-

 

அவர்கள் பிசாசு போன்றவர்கள். என்னை நாயையைவிட மோசமாக நடத்தினார்கள். நாயின் கழிவுகளை என்னை அகற்ற வைத்தனர்.இவர்களைப் பொறுத்தவரையில் நாயும், போலீஸ்காரர்களும் ஒன்றுதான். அவர்கள் மிகவும் அசிங்கமானவர்கள்.

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

மஹிபால் மன அழுத்தத்தில் இல்லை என்றும், அவர் நன்றாகத்தான் இருப்பதாகவும் போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.எனினும் விசாரணையின்போது மஹிபால் மிகவும் ஆக்ரோஷத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

 

MURDER, POLICE, DELHI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS