அர்ஜுன் ரெட்டி ஹீரோயினாக 'வாழ்வதற்கு' காத்திருக்க முடியவில்லை

Home > தமிழ் news
By |

அர்ஜுன் ரெட்டி ஹீரோயினாக வாழ்வதற்கு காத்திருக்க முடியவில்லை என நடிகை கியாரா அத்வானி தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஆண்டு வெளியாகி மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் உருவான இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.

 

இப்படம் தமிழில் துருவ நடிப்பில் வர்மாவாக ரீமேக் ஆகியுள்ளது. அதேபோல இந்தியில் இப்படம் ரீமேக் ஆகிவுள்ளது. ஷாகித் கபூர் ஹீரோவாகவும், கியாரா அத்வானி ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளனர்.தெலுங்கில் இயக்கிய சந்தீப் வங்கா இந்தியிலும் இப்படத்தை இயக்கவுள்ளார்.

 

இந்தநிலையில் நடிகை கியாரா இப்படம் குறித்த தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளார். அதில்,'' கடந்த வருடம் தெலுங்கு படப்பிடிப்பிற்கு வந்தபோது அர்ஜுன் ரெட்டி படம் பார்த்தேன். அப்போது உங்களுடன் ஒருநாள் வேலை செய்வேன் என, எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.நீங்கள்  பிரீத்தியை எனக்குள் காண்பது எனக்கு கவுரமாக உள்ளது. பிரீத்தியின் கதாபாத்திரத்தில் வாழ்வதற்கு காத்திருக்க முடியவில்லை,'' என தெரிவித்துள்ளார்.

 

பதிலுக்கு இயக்குநர் சந்தீப் வங்கா,''வெல்கம் பிரீத்தி கியாரா அத்வானி,'' என கியாராவை வரவேற்றுள்ளார்.

ARJUNREDDY, KIARAADVANI

OTHER NEWS SHOTS