கனமழை எதிரொலி: 'சென்னை உட்பட'..5 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

Home > தமிழ் news
By |

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

இந்தநிலையில் சென்னை, விழுப்புரம் , காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (வியாழன்)விடுமுறை அளித்துள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

 

இதேபோல திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூரில் நிவாரண முகாம்கள் உள்ள கல்லூரிகள் தவிர பிற மாநில கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை எனவும், நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS