'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'...மூன்றாவது டெஸ்டில் களமிறங்க இருக்கும் ஆல்ரவுண்டர்!

Home > தமிழ் news
By |

முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா,குணமாகி உள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது,முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது காயத்திலிருந்து முழுவதுமாக குணமாகி,  ரஞ்சி போட்டியில் விளையாடிய அவர் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

 

பரோடா அணிக்காக விளையாடிய  ஹர்திக் பாண்டியா மொத்தம் 18.5 ஓவர்கள் வீசி,81 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.முன்னதாக காயத்திலிருந்து குணமாகியுள்ள ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என  அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கான பயிற்சியாக ரஞ்சி கோப்பை போட்டிகள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் ப்ரித்வி ஷா இன்னும் முழுமையாக குணமாகாததால்,அவருக்கு முழுமையான ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

BCCI, HARDIKPANDYA, CRICKET, INDIA VS AUSTRALIA 2018

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS