இந்த மாவட்டங்களில் 'கனமழை' கொட்டித் தீர்க்கும்.. வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்!

Home > தமிழ் news
By |

பெயருக்கு ஏற்றாற்போல கஜா புயல் செல்லும் இடங்களை எல்லாம் ஆக்ரோஷமாகத் தாக்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கஜா புயல் திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது.

 

இந்தநிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கஜாவின் கோரத்தாண்டவம் குறித்து பதிவிட்டிருக்கிறார்.இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:-

 

அதிக கனமழை:-

 

திண்டுக்கல், மதுரை,புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும். கொடைக்கானலில் கனமழை கொட்டித் தீர்க்கும். காற்று கனமாக வீசும். இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் வெளியே வரவேண்டாம்.

 

 

கனமழை:-

 

 

திருச்சி, கரூர், ராமநாதபுரம், வால்பாறை, தூத்துக்குடி,நெல்லை, விருதுநகர், திருப்பூர் பகுதிகளுக்கு உட்பட்ட சில இடங்களில் கனமழை பெய்யும்.

 

சூறைக்காற்று:-

புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தின்  வடபகுதிகள், திருச்சியின் தென் பகுதி, கரூர் மாவட்டத்தின் தென் பகுதிகள், திண்டுக்கல், மதுரையின் வடபகுதி, தேனியின் பல்வேறு பகுதிகளில் கஜா புயல் காற்றின் தாக்கம் அதிகளவில் இருக்கும்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS