டோல் கேட்,பெட்ரோல் பங்க் மட்டுமல்ல....'சாலையையும் பதம் பார்த்த கஜா'!

Home > தமிழ் news
By |

வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயலின் வெளிப்பகுதி கரையை தொட்ட நிலையில் திருவாரூர், காரைக்கால், நாகை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் டோல் கேட் மற்றும் பெட்ரோல் பங்கை பதம் பார்த்த கஜா புயல் சாலையையும் விட்டு வைக்கவில்லை.காற்றின் வேகத்தின் காரணமாக திருச்சி விராலிமலை நெடுந்சாலையில் கடுமையான பள்ளம் ஏற்பட்டது.இது தொடர்பான வீடியோ காட்சிகள் புயலின் கோரத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

GAJACYCLONE, GAJA CYCLONE CYCLONE GAJA GAJA CYCLONE UPDATE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS