'மீண்டும் ராணுவத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்'...பலியான ராணுவ அதிகாரி...கொந்தளிப்பில் வீரர்கள்!
Home > தமிழ் newsபுல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் சோகம் மறைவதற்குள்,மீண்டும் ஒரு தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளார்கள்.இது ராணுவ வீரர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமாவின் பிங்லான் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட மொத்தம் 4 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட மொத்தம் 4 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.இரு வீரர்கள் படுகாயமடைந்தார்கள்.
இந்த தாக்குதல் குறித்து பேசிய ராணுவ அதிகாரி ஒருவர் ''நள்ளிரவில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ராணுவ வீரர்கள் பிங்லா பகுதிக்கு சென்றனர்.அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நமது வீரர்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தினார்கள்.இதற்கு ராணுவம் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.தற்போது துப்பாக்கி சண்டை முடிந்து விட்டபோதிலும் தேடுதல் வேட்டை மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக'' அவர் தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘யாரும் அழ வேண்டாம், நான் பிறந்ததே நாட்டிற்காக இறக்கத் தான்’.. மனதை உருக்கும் ராணுவ வீரரின் கவிதை!
- 'அம்மா'உங்கள கிட்ட இருந்து பாத்துக்கணும்'...சொல்லிட்டு போனவன் திரும்ப வரவே இல்ல!
- 'வீரர்கள் தான் எனக்கு முக்கியம்'...மகளின் திருமணத்தில்...'வைர வியாபாரியின் நெகிழவைத்த செயல்'!
- பலியான வீரரின் சடலத்தை தோள்கொடுத்து தூக்கிய உள்துறை அமைச்சர்.. வைரல் வீடியோ!
- "We will not forget": CRPF reacts to Pulwama Terror Attack for the first time
- ‘4 மாச கர்ப்பிணி மனைவிகிட்ட, இத எப்படி சொல்றது?’.. கலங்கும் தமிழக குடும்பம்!
- CM Edappadi Palaniswami announces Rs 20 lakh solatium for 2 breaved families of CRPF jawans
- 'நம்ம நாட்டுல யாராவது தீவிரவாதிகளை ஆதரித்தால்...துப்பாக்கியால் சுடுங்கள்'...இந்திய வீரர் ஆவேசம்!
- Pulwama Terror Attack - India summons Pakistan envoy
- ‘இத சொல்ல இதுவா நேரம்’..இந்திய கிரிக்கெட் வீரர் மீது பாய்ந்த இணையவாசிகள்!