எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க....போட்டியின் நடுவே ரசிகர் செய்த செயல்!

Home > தமிழ் news
By |

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்டில், கோலியுடன் செல்ஃபி எடுக்க, ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் முதல் பேட்டிங் தேர்வு செய்தார்.

 

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின்  துவக்க வீரர் பாவெலை (22) அஷ்வின் வெளியேற்றினார். பிராத்பெயிட் (14) குல்தீப் அதிரடி சுழலில் சிக்கினார். ஹோப் (36) உமேஷின் வேக பந்தில் வெளியேற, முதல் நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

 

இந்நிலையில்  கோலியுடன் செல்ஃபிஎடுக்க, ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடி வந்தார்.வந்தவுடன் அவர் கோலியை கட்டிப்பிடிக்க முயற்சி செய்தார்.அதற்குள் கோலி விலகி சென்றார்.அதற்குள் அந்த ரசிகரும் செல்ஃபி எடுத்து விட அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை வெளியேற்றினார்கள்.இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

CRICKET, VIRATKOHLI, HYDERABAD

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS