கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என்றும்  காவேரி மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை வெளியிட்டது.

 

இந்தநிலையில் கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என காவேரி மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை வெளியிட்டது.இதனால் காவேரி மருத்துவமனை முன் குவிந்துள்ள தொண்டர்கள் கதறி அழத் தொடங்கியுள்ளனர்.

 

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து சற்றுமுன் துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு உள்ளிட்ட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் கண்ணீருடன் வெளியேறினர்.இதேபோல மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் திரும்பிய கருணாநிதி மகள் செல்வி கதறி அழுதுகொண்டே இல்லத்தினுள் சென்றார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS