தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வந்த 'செக்க சிவந்த வானம்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

 

இந்தநிலையில் அப்போலோ மருத்துவமனையில் இயக்குநர் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து நமது நெருங்கிய வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது,'' இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்றும்,தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும்,'' தெரிவித்தனர்.

 

இந்தத் தகவலை இயக்குநர் மணிரத்னத்தின் பி.ஆர்.ஓ நிகிலும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

BY MANJULA | JUL 26, 2018 4:43 PM #MANIRATNAM #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS