மணமகனை சுட்ட மர்ம நபர்கள்:சிகிச்சையும் கையுமாக சடங்குகளை செய்த மாப்பிள்ளை!

Home > தமிழ் news
By |

டெல்லியில் 25 வயது மதிக்கத்தக்க மணமகன் ஒருவர் திருமண வேளையில் இரவு திடீரென வந்த மர்ம நபர்களால் சுடப்பட்டுள்ள சம்பவம் பீதியை கிளப்பியுள்ளது. 

 

திருமண வேளையில் மணமகன் படேல் என்பவர், குதிரை வழிப் பயணமாக திருமணம் நடைபெறும் இடத்தில் இருந்து 400 முதல் 500 மீட்டர் தொலைவில், ஆங்காங்கே திருமண கொண்டாட்டம் போய்க்கொண்டிருந்த சத்தத்தில் எதிரபாராத விதமாக இரவு 10 மணிக்கு, அங்கு வந்த 2 நபர்களால் தோளில் சுடப்பட்டுள்ளார். 

 

அருகில் இருந்தவர்கள் கூச்சலிடுவதற்குள் தப்பித்த நபர்களை யாராலும் பிடிக்க முடியாத சூழலில், சிலர் மட்டும் மணமகனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும் மணமகன் படேல் 3 மணி நேர சிகிச்சைப் பிறகு உடனடியாக வந்து திருமண சடங்குகளையும் செய்து முடித்துள்ளார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர். 

DELHI, GROOM, BIZARRE, INCIDENT, ASSAULT, ATTACK, VIRAL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS