ஹோட்டல் ஊழியர்களுக்கு டிப்ஸாக ரூபாய் 16 லட்சத்தை, பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ கொடுத்துள்ளார்.

 

போர்ச்சுகல் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலி மற்றும் குடும்பத்தினருடன் சமீபத்தில் கிரீஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த ரொனால்டோ கிளம்பும்போது, ஹோட்டல் ஊழியர்களுக்கு டிப்ஸாக ரூ.16 லட்சத்தை அளித்துள்ளார்.

 

ஊழியர்களின் விருந்தோம்பலால் கவரப்பட்டு ரொனால்டோ இந்த டிப்ஸை அளித்ததாக கூறப்படுகிறது. ரொனால்டோவின் இந்த பரந்த மனப்பான்மையை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.

 

இதுவரை ரியல் மாட்ரிட் அணிக்காக இதுவரை விளையாடி வந்த ரொனால்டோ சமீபத்தில் யுவெண்ட்ஸ் கிளப் அணிக்கு மாறினார் என்பது குறிப்பிடத் தக்கது.

BY MANJULA | JUL 20, 2018 4:20 PM #CRISTIANORONALDO #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS