Watch Video:'மஹத் அப்படி செய்வான்னு எதிர்பார்க்கல'.. பிக்பாஸ் யாஷிகா ஓபன் டாக்!

Home > தமிழ் news
By |

பிக்பாஸ் சீசன் 2-வின் மிகவும் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் யாஷிகா ஆனந்த். கண்டிப்பாக டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் சற்றும் எதிர்பாராத வகையில் வீட்டைவிட்டு வெளியேறினார்.

 

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது மஹத்-யாஷிகா இருவரின் காதல் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து, பின்னர் ஒருவழியாக சரியானது. இந்தநிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி,மஹத் உடனான காதல் மற்றும் சக போட்டியாளர்கள் உடனான நட்பு ஆகியவை குறித்து நமது தளத்திற்கு யாஷிகா ஆனந்த் சமீபத்தில் பேட்டியளித்தார்.

 

மஹத் உடனான காதல் குறித்து அவரிடம் கேட்டபோது,'' ஹரீஷ் கல்யாண் வீட்டுக்கு வர்றதுக்கு 1 மணி நேரம் முன்னாடி தான் என்ன லவ் பண்றன்னு சொன்னான். ஹரீஷ் அந்த கேள்வி கேட்டப்போ நான் உட்பட எல்லாரும் எஸ்னு சொன்னாங்க. ஆனா அவன் மட்டும் நோ-னு சொன்னான். எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. நான் ரொம்ப உடைஞ்சு அழுதேன். அவன் சொன்னான் ஓகே. ஆனா  நான் உண்மையா லவ் பண்ணேன்.எனக்கு புரிஞ்சது.இது என்னோட உரிமை கிடையாது.திரும்பவும் எனக்கு ஆறுதல் அளிச்சு, எல்லார் முன்னாலயும் என்ன லவ் பண்றேன்னு ஒத்துக்கிட்டான். 

 

நான் உண்மையா லவ் பண்ணேன். ஆனா அவனுக்கு வெளில ஒரு உயிர் வெயிட் பண்ணுது. அவனுக்கு எப்பவும் ஒரு பயம் இருந்தது. ஐயோ வெளில ஒரு பொண்ண நான் லவ் பண்றேன். எல்லாரும் என்ன நினைப்பாங்க. ரெண்டு பேர எப்படி லவ் பண்ண முடியும்.என் கேர்ள் பிரண்ட் என்ன நெனைப்பா. என் அக்கா என்ன நெனைப்பாங்க. இப்படியெல்லாம் நெறைய அவன் யோசிச்சான்.பிராச்சி அவன் லைஃப்ல இல்லனா இது வேற மாதிரி இருந்துருக்கும்,'' என பதிலளித்துள்ளார்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS