பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மஹத் குறித்த விசாரணைகள் மற்றும் புகார்கள் அதிகமாக இருந்தன.அதேபோல நேற்றைய விசாரணையிலும் கமல்,மஹத் மீது தனது கோபத்தைக் காட்டியிருந்தார்.

 

இந்தநிலையில் மஹத் வெளியேற்றப்படுவதாக கமல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அவரின் வெளியேற்றம் தாங்க முடியாமல் யாஷிகா-ஐஸ்வர்யா இருவரும் கதறினர். தொடர்ந்து பாலாஜி,மஹத்துக்கு அட்வைஸ்செய்தார்.

 

ஜனனி, மஹத்திடம், 'வெளில போய் பிராச்சி கிட்ட பேசு' என அட்வைஸ் வழங்கினார்.இதைத் தொடர்ந்து வீட்டில் உள்ளவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு மஹத் வீட்டைவிட்டு வெளியேறினார்.ரெட் கார்டு மூலம் 8-வது நபராக, மஹத் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS