இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்குவது போல காட்டப்பட்டது. தலைவி யாஷிகா இந்த விருதுகளை வழங்குகிறார்.இதில் மும்தாஜ்க்கு பாம்பு சின்னமும், ஐஸ்வர்யாவுக்கு கழுதை சின்னமும் வழங்கப்பட்டது.

 

தொடர்ந்து வெளியான 2--வது ப்ரோமோ வீடியோவில் நீலிக்கண்ணீர் வடித்து காரியம் சாதித்துக் கொள்பவர் என்ற விருது, ஜனனிக்கு-யாஷிகாவால் வழங்கப்படுகிறது. இதனை ஏற்க மறுக்கும் ஜனனி நான் அப்படி ஒன்றும் இல்லை என தனக்கு அளித்த விருதினை வாங்கி, அங்கேயே வைத்துவிட்டு வருகிறார்.

 

இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் இதுநாள்வரை அமைதியான போட்டியாளராக வலம்வந்த ஜனனி, தற்போது தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

 

கடந்த சீசனில் ஓவியாவுக்கு இதுபோல பிக்பாஸ் வீட்டில் விருது வழங்கப்பட்ட போது, அவர் அதனை ஏற்றுக்கொள்ளாமல்  திருப்பி அளித்தது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS