ரிசர்வ வங்கியில் பணிபுரிபவர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்ததாக கூறப்பட்டதை அடுத்து, வங்கிகள் ஒரு வாரத்துக்கு செயல்படாது என்பது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக நிதி அமைச்சகம் சார்பில் இன்று அளித்துள்ள பேட்டியில், அரசு விதிமுறைகளின்படி, இரண்டாம் சனிக்கிழமையான 8ம் தேதி மட்டும்தான் வங்கிகளுக்கு விடுமுறை என்றும், மற்றபடி வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.

 

அதுமட்டுமின்றி மக்கள் சிரமப்படுவதைத் தவிர்க்க முறையாக ஏடிஎம்களில் பணம் நிரப்பப் பட்டிருக்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

BY SIVA SANKAR | AUG 31, 2018 1:07 PM #NOBANKHOLIDAY #TNBANKING #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS