இரும்புத்திரை 100-வது நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, சென்னை வந்த நடிகை சமந்தா ஜாம் பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்துள்ளார்.

 

'இரும்புத்திரை' வெற்றிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சமந்தா, திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம் பஜார் மார்க்கெட்டுக்கு சென்றார். அங்குள்ள ஒரு பெண்மணியின் காய்கறி கடையில் அமர்ந்து, காய்கறி விற்பனையாளராகவும் அவர் மாறினார். 

 

சமந்தா காய்கறி விற்பதைப் பார்த்த பொதுமக்கள் போட்டிபோட்டு காய்கறிகளை வாங்க, சற்றுநேரத்திலேயே மொத்த காய்கறியும் விற்பனையானது.எதற்காக சமந்தா காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றார் என்பது தெரியவில்லை எனினும், நிதி திரட்டுவதற்காக அவர் அங்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

BY MANJULA | AUG 31, 2018 2:34 PM #SAMANTHA #IRUMBUTHIRAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS