'மன்னிப்பு கேட்ட சண்முகராஜன்'.. பாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை!

Home > தமிழ் news
By |

படப்பிடிப்புத் தளத்தில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி காவல்நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.

 

பிரபல தனியார் தொலைக்காட்சியின் சீரியல் படப்பிடிப்பு கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 11-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இதில் நடிகை ராணி, நடிகர் சண்முகராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

 

படப்பிடிப்புத் தளத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக,நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி செங்குன்றம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.அதில் தனக்கு கணவராக நடித்து வரும் சண்முகராஜன் காட்சிகளின் போது தவறான எண்ணத்தில் தொடுவதாகவும், அடிப்பது போன்ற காட்சிகளில் உண்மையிலேயே தன்னை அடிப்பதாகவும் ராணி தெரிவித்துள்ளார்.

 

இதனை பற்றிக் கேட்ட போது தனது கணவர் பிரசாத்தையும், தன்னையும் தாக்கியதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.இதுதவிர படப்பிடிப்புத் தளங்களில் தன்னுடன் தனியாக உணவருந்த வருமாறும், தனியாக தன்னுடன் தங்க வருமாறு அழைத்ததாகவும் அந்த புகாரில் ராணி கூறியிருந்தார்.

 

இதனிடையே குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் சண்முகராஜன் செங்குன்றம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

 

இந்தநிலையில் சமீபத்திய தகவலின்படி நடிகர் சண்முகராஜன் நடிகை ராணியிடம் மன்னிப்பு கேட்டதால், அவர் மீதான பாலியல் புகாரை நடிகை ராணி வாபஸ் பெற்றுள்ளார்.

#METOO, RANI, SHANMUGARAJAN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS