தாய்-தந்தை-தங்கை 3 பேரையும் கொன்று, நாடகமாடிய 19 வயது இளைஞர்!

Home > தமிழ் news
By |

டெல்லியில் 19 வயது இளைஞர் ஒருவர் தான் படிக்காமல், ஊற்றித் திரிந்ததை கண்டித்ததற்காக தன் தாய், தந்தையர் மற்றும் தங்கையைக் கொன்று குவித்திருக்கும் சம்பவம் பெற்றோர்களிடையேவும் பொதுமக்களிடையேவும் பெருத்த  அச்சத்தையும் பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது.தென்மேற்கு டெல்லி பகுதியில் சர்ணம் வர்மா என்கிற சுராஜ் அப்பகுதியில், ஒழுங்காய் படிப்பதில்லை என்றும் ஊர் சுற்றித் திரிவதாகவும் அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.  

 

இதனால் ஆத்திரமடைந்த சுராஜ் தன் தந்தை மிதிலேஷ் , தாய் சியா மற்றும் தங்கை ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தன் மீதும் காயங்களை உண்டுசெய்துகொண்டு பின்னர் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டு, வீட்டில் கொள்ளை அடிக்க வந்தவர்கள்தான் தன் குடும்பத்தாரை கொன்றுள்ளதாக கபட நாடகம் ஆடியுள்ளார்.பின்னர் பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வுகளுக்கு பிறகு, சுராஜின் கைரேகையை வைத்து சுராஜ்தான் தன் தாய், தந்தை மற்றும் தங்கையரை கொன்றுவிட்டு நாடகமாடியுள்ளதை கண்டுபிடித்து விசாரித்துள்ளனர். 

 

பின்னர் சுராஜ் எல்லா உண்மைகளையும் ஒப்புக்கொண்ட சுராஜ் முதலில் தான் தற்கொலை செய்துகொள்ளவே நினைத்ததாகவும் பின்னர் தான் தண்டிக்கப்படவேண்டியது தன் குடும்பத்தார் என்றும் முடிவு செய்து இந்த கொலைகளை செய்ததாகவும் கூறியதை அடுத்து  சிறையில் அடைக்கப்பட்டார்.

DELHI, TEENKILLS, 19YROLD, MURDER, CRIME, MURDERER, KITE_FLYING, INDIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS