ஓடும் ரயிலின் தண்டவாள இடுக்கில் விழுந்த 1 வயது குழந்தை: பதறவைக்கும் வீடியோ!

Home > தமிழ் news
By |

ஆக்ரா - டெல்லி இடையிலான ரயில் நிலையங்களுள் முக்கியமான ஒன்று மதுரா ரயில் நிலையம். இங்கு பயணிகள் கூட்டத்தோடு கூட்டமாக வந்துகொண்டிருக்க, பிளாட்பார்மை ஒட்டி, ரயிலின் அருகே கைகுழந்தையுடன் வந்த தாயிடம் இருந்து குழந்தை கைதவறி அந்த 1 வயது குழந்தை துரதிர்ஷ்டவசமாக ரயிலின் தண்டவாளத்தில் விழுந்துள்ளது. 

 

தடதடக்கும் இந்த சம்பவத்தில் நெஞ்சை படபடக்க வைத்த விஷயம் என்னவென்றால் அப்போது ரயில் தண்டவாளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. செய்வதறியாது கூடியிருந்தவர்கள் அனைவரும் பதறியும் கதறியும் குழந்தையை காப்பாற்ற துடித்துள்ளனர். 

 

ஆனால் ரயில் சென்றவுடனே சற்றும் தாமதிக்காமல் டிராக்கில் குதித்த இளைஞன் குழந்தையைத் தூக்கி பெற்றோர்களிடம் ஒப்படைத்தால், அதிசயம் - குழந்தைக்கு ஒன்றும் ஆகாமல் அதிர்ஷடவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளது. வைரலாகும் இந்த வீடியோவில் உள்ள குழந்தை இத்தனை சிறுவயதில் ஓடும் ரயிலின் போது தண்டவாள இடுக்கில் விழுந்தும் உயிர் தப்பியுள்ளது கண்டு பலரும் வியந்துபோயுள்ளனர்.  

 

TRAIN, TRAINACCIDENT, MADURARAILWAYSTATION, VIRAL, VIDEOCLIP, VIRALVIDEOS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS